பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. வீட்டினைப் பார்க்கிறோம்! வருடங்கள் கேட்கிறோம்! வயதென்ன? எனப் பார்க்கிறோம்! விழுமா வீழாதா! வாழுமா பலகாலம்! வினாக்கள் பல கேட்கிறோம்! காட்டிலே விதைக்கிறோம்! கதிர்களை வளர்க்கின் றோம்! காரியம் பல செய்கிறோம்! 1. கதிர்களை அறுக்கின்ற காலத்தைக் கணிக்கின்றோம்! காரணம் பல சொல்கிறோம்! நாட்டிலே நடைபெறும் நற்றொழில் அனைத்துக்கும் நாள்பார்த்து பயன் சேர்க்கிறோம்! நாடிடும் பொருட்களின் நற்றிறம் பார்க்கிறோம்! நிர்ணயம் நாம் செய்கிறோம்! கூட்டிலே குடிவாழும் உயிருக்குக் காலத்தைக் கூறவே திகைக்கிறோமே! கூறாமல் காத்திடும் இறைவனே! நீ வாழும் கோயிலின் தரம் கூட்டவா!