பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. கூரில்லா ஈட்டியும் குருவில்லா வித்தையும் o கூடினும் பலனில்லை காண்! குறிகெட்ட முயற்சியும் குணம் கெட்டப் பயிற்சியும் குவியினும் பயனில்லை காண்! வேரில்லா மரங்களும் விரலில்லா கரங்களும் விரிந்தாலும் பிடிப்பில்லை காண்! வீடில்லா மனிதரும் கூடில்லா பறவையும் வாழினும் செழிப்பில்லை காண்! தேரில்லாத் திருவிழா திரையில்லா மேடை யும் திகழ்ந்தாலும் சிறப்பில்லை காண்! தேடாத திரவியம் திறமில்லா காரியம் சேர்ந்தாலும் செழிப்பில்லை காண்! சீரில்லா தேகமும் வீறின்றி போகையில்; தினம் தினம்களை மாறுமே! சிறப்பான தேகத்தை செழிப்பாகக் காக்கவே தெய்வமே வழிகாட்ட வா!