பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைப் பந்தாட்டம் 81 —- 23. பாலங்கள் ஆற்றுக்கு பருவங்கள் காற்றுக்கு; பள்ளங்கள் ஊற்றுக்குத்தான்! பாவங்கள் மடமைக்கு; பாரங்கள் கடமைக்கு; பரிசாகப் பிறந்திடும் தான்! கோலங்கள் அழகுக்கு; கோணங்கள் கணக்குக்கு! கோடிட்டுக் காட்டிடத்தான்! கோபங்கள் உணர்வுக்கு; கோஷங்கள் உணவுக்கு கொலுவைத்துக் காட்டிடத்தான்! சீலங்கள் செழுமைக்கு; ஜீவன்கள் முழுமைக்கு; சிந்தையின் நிறைவிலே தான்! தீபங்கள் பக்திக்கு; தேகங்கள் சக்திக்கு; தினம் தினம் வளர்ந்திடத்தான்! காலங்கள் போனாலும் காதங்கள் கடந்தாலும் கருத்தெலாம் உடல் காக்கத்தான்! கல்லறை மேடாகக் காட்டாமல், உடல் எழில் காட்ட வா இறைவனே வா!