பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Soo தவனின் _ 24. இகழ்ச்சியாய் பேசுவார்! ஏளனப் படுத்துவார்; இடியெனச் சிரித்து மகிழ்வார்! "இவனாலே முடியுமோ? எதற்கிவன் அலைகிறான்' எனக்கூறி பழித்து நிற்பார்! தகராறு நிகழ்த்துவார் தவறென்று முழக்குவார்; தரித்திரம் எனச் சுளிப்பார்! தரைமட்டம் ஆகவே சாபங்கள் வீசுவார்! சாடியே அமைதி பெறுவார்; இகத்தினில் இது போன்று ஏராள நிகழ்ச்சிகள் இருந்தன. இருக்கும் என்று, ! எந்த நல் முயற்சியும் எடுத்த நாள் தொடக்கத்தில் இப்படித் தான் சிரிக்கும்! முகத்திலே புன்னகை; முயற்சியில் வல்லமை முனைப்போடு தொடர்ந்துவிடுவோம்! அகலாது வெற்றியே; ஆண்டவன் சக்தியே! ஆண்டவா வழிகாட்ட வா!