பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. வலிமையே மானிடம் வலிமையே யாக்கையாம் வளர்ந்திடும் பெருஞ் செல்வம்தான்! வலிமையே வாழ்க்கையாம் வலிமையே மாமதம் வானூறும் எழில்மதி தான்! பொலிவான அழகையும் பூரிப்பும் புதுமையும் பொங்கிடச் செய்வதே தான் ! பொதுவாக இளமையும் புறம்போக முதுமையைப் போக்கிடும் பொன் மேடை தான்! நலிவாக்கும் நோய்களும் நரையாக்கும் குறைகளும் நெருங்காமல் உடல் காக்கும் தான்! நலமான நாட்களை நயந்தேந்தி வளர்த்திடும் நல்லதோர் நிறை சுகம்தான்! வலிமையே தெய்வம்தான் வலிமையால் உய்வோம் நாம் வலிமையை நாடிப் பெறுவோம்! வரமான வாழ்க்கையை தரமாக வாழவே வழிகாட்ட இறைவனே வா!