பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 28. படிக்காத வேதமும் நடக்காத பாதமும் பயனில்லை பயனில்லையே! படைக்காத சாதமும் ரசிக்காத கீத மும் பலனில்லை பலனில்லையே! முடிக்காத நாவலும் முடையாத கூடையும் மூளிதான் ரசிப்பில்லையே! முளைக்காத விதைகளும் நீரில்லா நதிகளும் மோசமே மதிப்பில்லையே! மிடுக்கில்லா தேகமும் விடை காணா யூகமும் மேவினும் பெருமையிலையே! மிருகம் போல் வாழ்வதும் மேனியை இகழ்வதும் மேலோரின் வாழ்க்கையிலையே! அடுக்கடுக்காகவே ஆனந்தம் அளித்திடும் அற்புதம் நம் தேகம் தான்! அறிவான வாழ்க்கையை அன்போடு வாழவே ஆண்டவா வழிகாட்டவா! நவணின்