பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 நவனின் 80, வரிசையாய் எறும்புபோல் வழிபார்த்துச் சென்றிடும் வளமான ஒழுங்கு வேண்டும்! வழவழப்பாக்கியே வழி போகும் நத்தையின் வலிவான பொறுமை வேண்டும்! தரிசான நிலங்களாய் தவறிப் போய் கிடக்காமல். தரம்பேணும் நெஞ்சம் வேண்டும்! தன்னையே பெரிதென்று தருக்கித் திரிகின்ற தற்போதம் நீங்க வேண்டும்! நெரிசலில் நசுங்கிடும் தாயற்றக் குழந்தையின் நிலைமையில் நினைவு வேண்டாம்! நிறை அறம் காக்கவும் நிதம் சினம் போக்கவும் நிறைவான நெஞ்சம் வேண்டும்! மரித்திடும் தேகம் தான்! மரித்திடும் நாள் வரை மனம்போல வாழ்வுபெறவே வரமான வாழ்க்கையை தரமாக வாழவே வழிகாட்ட இறைவனே வா!