பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைப் பந்தாட்டம் 39 —. 31. செல்லாத நாணயம் செயல்படா நாநயம் சீக்கிரம் மதிப்பிழக்கும் ! சீரில்லா ஆலயம் == சிறப்பில்லா கவிநயம் சேர்ந்தாலும் மதிப்பிழக்கும். கல்லாதார் உறவுகள் கடன்காரர் நெளிவுகள்' கண்டாலும் பயமளிக்கும் ! கருநாகக் கவர்ச்சிகள் கன்னியின் வளைவுகள் காட்சியே துயரளிக்கும்! பொல்லாத உலகமே போதுமே வாழ்வென்று புலம்புவோர் நிறையவுண்டு! புதுமைகள் படைத்திடும் பூமலர் மேடை தான் புகழ்தரும் நமது தேகம்! நல்லதோர் வாழ்க்கைக்கு நலமான தேகமே நடமாடும் கலைக் கழகமே! நவமான வாழ்க்கையை நலமாக வாழவே நாதனே வழிகாட்டவா!