பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. விளையாட்டைப் புகழ்கிறோம்! விளையாடச் சொல்கிறோம்! வீட்டார்கள் ஏற்கவில்லையே, விளையாட்டே வாழ்வுக்கு வழிப்பாதை என்கிறோம்! விண்ணப்பம் ஏறவில்லையே! சுளைபலா என்கிறோம்! சுகம் தரும் என்கிறோம்! சுற்றமோ ரசிக்கவில்லையே! சுடரேற்றப் பார்க்கிறோம்! தீபங்கள் வைக்கிறோம்! தீபத்தில் சுடரில்லையே! விளையாத தரிசுக்கு வேலிகள் வைக்கிறோம்! விரும்பியது கிடைக்கவில்லையே! விரைவான முன்னேற்றம் வரும் என்று கூறினோம்! விளைவுகள் சகிக்கவில்லையே! களைகள்தாம் வளர்ந்ததோ! பதர்களே மலிந்ததோ! காரணம் தெரியவில்லையே! கறைபோக்கும் இறைவனே! குறைபோக்கும் வழிகளை கூறியே வழிகாட்டவா!