பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_-TT 41. பயன்பட வேண்டும் நாம்! பயன்தர வேண்டும் நாம்! பயன்பெறும் வழி என்னவோ? பலனுறும் வழி என்னவோ? நயம்பட வேண்டும் நாம் நலமுறும் வழி என்னவோ? நலனுறும் வழி என்னவோ? இயம்பினால் எளிதுதான் என்றாலும் ஏற்பாரில்லை? இப்பயன் யாவையும் எளிதுறக் கொடுப்பதோ இனிய நல் தேகம் தானே! அயர்விலா ஆற்றலும் அளிக்கும் நல் தேகம் தானே! அருமையாம் தேகத்தை பெருமையாய் காத்திட ஆண்டவா வழி காட்டவா!