பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.56 48. வயதை ஏன் பார்க்கிறீர்! வயதுக்கும் வாழ்வுக்கும் வரப்புகள் ஏதுமில்லை! வாழ்வுக்கும் மகிழ்வுக்கும் வளமான தேகம் தான் வயது தான் தடுப்பதில்லை! குயில் பாடும் வசந்தத்தின் குளிர் கால காலையே கட்டான உடற்கோலமே! கோடையின் தென்றலே கொல்லி மலைச் சாரலே! கொடுப்பதோ சுக ஜாலமே! கயல் விழி வேகம் தான் கவர்கின்ற ராகம் தான் காணாத இன்பங்களே கவி பாடும் இளமையை கைக்குள்ளே வைக்கலாம்! கனிவோடு நாம் காக்கலாம். வயதை ஏன் பார்க்கிறீர்! வாழ்வையே நேர்மையாய் வாழ்ந்தாலே இளமை தானே! வாலிபம் தொடரவே வான் சுகம் வளரவே வல்லவா வழிகாட்டவா!