இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சிந்தனைப் பந்தாட்டம் 57 = 49. முதுமையை நாடியே மூடராய் பறப்பதேன்? முதற்பணி உடல்காப்பதே! முழுமையைத் தேடிடும் இளமையைச் சேர்ப்பதே மணி உடல் நலம்பார்ப்பதே! பதுமையைப் போலவே படுத்துண்டு கிடப்பதோ பேருடல் காப்பதல்ல! பாங்குடன் வியர்வையும் பழகிடும் உழைப்பையும் பண்புடன் பொழிவதால்தான்! புதுமைகள் படைத்திடும் புரட்சித்தாய் தேகமே புரிந்தவர் பயனடைந்தார்! புரியாத பேர்களோ புலிக்கூண்டில் கிடப்பவர் போலவே நலிந்துபோனார்! இதமான இயற்கையை இனிமையாம் உலகத்தை இறைவனே தந்துவைத்தான்! இன்பமாய் வாழவே என்றென்றும் மகிழவே இறைவனே வழிகாட்டவா! சிந்-4