பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 50. வாத்துகள் அன்னமாய் மாறுமோ, சேறுகள் வண்ணமாய் மாறிவிடுமோ! வளைமுட்டிக் கழுதைகள் வாளிப்புக் குதிரையாய் வாழ்நாளில் மாறிவருமோ! பாத்திகள் ஆகியே பயிர்களை விளைக்கவே பாறைகள் பதங்கள் பெறுமோ! பாட்டிகள் ஒப்பனை பண்ணியே முயன்றாலும் பருவப்பெண் ஆகமுடியுமோ! வாத்தியார் வம்புகள் மாணவர்போல் செய்தால் மானமும் மதிப்பும் வருமோ! வால்ஆடி குதித்தாலும் முகம்போன்ற அழகுடன் வாய்க்கின்ற பெருமையுறுமோ! ஆத்திரம் கொள்கிறார் அருமையே உடலென்றால் அதற்கீடு உலகிலெதுதான்? அருமையாம் தேகத்தை பெருமையாய் காக்கவே ஆண்டவா வழிகாட்டவா!