பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, 740 82. அன்புக்கு முன்னாலே அனைவரும் அடிமைதான் அன்புக்கு வலிமை தேவை! அறிவுக்கு முன்னாலே அகிலமே அடிமைதான் அறிவுக்கு வலிமை தேவை! பண்புக்கு முன்னாலே பார்ப்பவர் அடிமைதான் பண்புக்கு வலிமை தேவை! பரமனின் பக்திக்கும் படைக்கின்ற சக்திக்கும் பலமென்னும் வலிமை தேவை! என்பிலும் சதையிலும் எண்ணற்ற திசுக்களில் எந்நாளும் வலிமை தேவை! இரத்தத்தில் நரம்புகள் இணையில்லா செயல்களில் இறைதேடும் வலிமைதேவை! தெம்பான வலிமையே திகழ்கின்ற திரவியம் தேடி நாம் அடையவேண்டும்! தேடிடும் மன ம் பெற திறமைகள் தினம் வர தேவனே வழிகாட்டவா!