பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

  • “76

88. ஜோசியம் கேட்பதும் சொர்க்கமே வரும்என்றும் சோம்பிக் கிடப்பதே பாழ்! சுறுசுறுப் பென்றதோர் சூத்திரம் மறந்தவர் செல்வந்தராயினும் பாழ்! ராசிகள் பார்ப்பதும் இராப்பகல் கிடப்பதும்: இருக்கின்ற இன்பமும் பாழ்! ஏசியும் பேசியும் எதையும் பெற எண்ணும் ஏய்ப்பவர் எதிர்காலம் பாழ்! காசுதான் வாழ்வென்று கங்கணம் கட்டியே காத்துக் கிடப்பவர் பாழ்! காரணம் இல்லாமல் காரியம் செய்பவர் காலமும் மானமும் பாழ்! மாசிலா வாழ்க்கையாம் மணியான வாழ்க்கையாம் வலிமையின் தேகத்தினால்! மாறாத இன்பங்கள் மலையாறு போல்பாய மாதவா வழிகாட்டவா!