பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைப் பந்தாட்டம் _ 87 79. ஆசைக்கு வாழ்வது அவலத்தில் முடியுமே அறிவுடன் வாழ்ந்து செல்வோம்! ஆசைக்கு அறிவுடன் ஆராயும் பண்பிலே ஆனந்தம் என்றும் கொள்வோம்! காசுக்கு வாழ்வது கவலையில் கொல் லுமே கடமையில் வாழ்ந்து செல்வோம்! காசுடன் கடமையும் கருத்துடன் கலந்திடின் காலங்கள் மகிழ்ச்சி தருமே! மீசைக்கே முகமெனில் முகம் அவலட்சணம் மரம் தாவும் குரங்கினழகே! மீசைக்கு அளவுபோல் ஆசைக்கு அளவுகள் மேற்கொண்டால் இன் பங்களே! மாசிலா இறையவன் மலரடி நினைவுடன் மனமார சரண்புகுந்தால் மாறாத அமைதியே வரும் இன்பப் பெருகியே வழிகாட்ட இறைவனே வா!