பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைப் பந்தாட்டம் so 81. ஒரு கோடி ராகங்கள் உணர்வோடு பாடலாம் உள்ளத்தில் வலுவிருந்தால்! ஒருகோடி ஓடிப்போய் - மறுகோடி திரும்பலாம் உடலிலே வலுவிருந்தால்! திருதேடி திரியலாம் திகைக்காமல் சேர்க்கலாம் தேகத்தில் திறமிருந்தால்! தீயவோர் எண்ணமே தெரியாமல் வாழலாம் தெய்வத்தை நம்பிநின்றால்! வரும் காலம் முழுவதும் மகிழ்வோடு வாழலாம் மாண்புடன் உடலைவைத்தால்! வந்தாலும் நோய்களும் வழி பார்த்து ஓடிடும் வகையாகப் பயிற்சி செய்தால்! அரும்கோடி செல்வமே பெறும்கோடி இன்பமே அதுவே நம்எழில் தேகமே! அருமையாம் தேகத்தை அறிவுடன் காக்கவே ஆண்டவா வழிகாட்டவா சிந்-6