பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைப் பந்தாட்டம் 88. உடல் நலம் இல்லாமல் ஒரு வேளை கிடந்தாலும் உலகின்மேல் வெறுப்புவருமே! உணவுகள் செல்லாமல் உணர்வுகள் துள்ளாமல் உள்ளத்தைத் துளைத்து விடுமே! இடையிடை வருபவர் இரக்கமாய் கேட்கின்ற ஏளனம் எரிச்சல் தருமே! "இப்படி ப் போன சமே” என்கின்ற எண்ணமே இதயத்தில் நமைச்சல் தகுமே! தொடர்ச்சியாய் நடக்கின்ற சிறுசிறு செயல் கூட தடைபட மனம் வாடுமே! சேர்கின்ற வருமானம் செயல்படும் தன்மானம் சிதைந்திட மனம் நோகுமே! உடல்நலம் ஒன்றுதான் உலகினில் செல்வம்தான் உலகினில் இது செல்வமே! திடமாகச் செல்வத்தை தினம்தினம் சேர்க்கவே தேவனே வழிகாட்டவா! 81.