பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நவனின் 84. இத்தனை செய்திட இருக்கிற தாஎன்று எண்ணினால் மலைப்பே வரும்! இத்தனை தானே ஒ! என்று நீர் எண்ணினால் இமயமும் துரும்பாய் விடும்! எத்தனை வலிதாக எத்தொழில் இருந்தாலும் இலட்சியம் வென்று விடும்! பித்தரைப் போலவே பிதற்றியே திரிந்தாலே பிரச்சினை பெரிதாய் விடும்! நித்தமும் இலட்சியம் நினைவிலும் செயலிலும் நின்றாலே வலிமை வரும்! நிம்மதி வந்திடும் நிறை இன்பம் தேங்கிடும் நெடும்புகழ் சேர்ந்தே வரும்! அத்தனை சுகத்தையும் அணிப்பது நல்உடல் அனைத்திற்கும் ஆதாரமே! அருமையாம் தேகத்தை பெருமையாய் காக்கவே ஆண்டவா வழிகாட்டவா!