பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலி : குருதேவர் நம் திட்டத்திற்கு உடன்பட்டாரா?

லிகு : உடன்படாமல் இருப்பாரா!

கலி : கடவுள் என் பிரார்த்தனைக்கு இரங்கிவிட்டார்.

லிகு : ஆம்! நல்லவர்களுக்கு மட்டுமல்ல, பொல்லாதவர்கள் பிரார்த்தனைக்கும் கடவுள் அருள் புரிகிறார். அவர் பிரதிநிதியான மதகுருவும் அப்படித்தான். ஆனால் அவர் வெறும் பிரார்த்தனையை மட்டும் எதிர்பார்க்கமாட்டார். வேறு பலனும் எதிர்பார்ப்பார்.

கலி : அதென்ன? அவர் எதிர்பார்ப்பது?

லிகு : பணம்!

கலி : கொடுத்து விடுவோம். எவ்வள்வு?

லிகு : முந்நூறு டூக்காட்.

கலி : சம்மதம்!

லிகு : மெசர் நிக்கியா வேறு இருபத்தைந்து டூக்காட் கொடுத்திருக்கிறார்.

கலி : (ஆச்சரியமாக) என்ன? அவரா?

லிகு : ஆம்! அதைப் பற்றி நீர் கவலைப்பட வேண்ட்ாமையா? சரி, மருந்து தயார்ாக வைத்திருக்கிறீரா?

கலி : ஆம்!

லிகு : என்ன மருந்து?

கலி : திராட்சைப் பழரசம் தான்! அதுதான் அவளுக்கு உடலுக்கும் மனத்திற்கும் கிளர்ச்சியுண்டாக்கக் கூடிய நல் மருந்து. ஆனால், ஆ! கடவுளே! நான் எவ்வளவு முட்டாள்தனமாக நடந்து கொண்டுவிட்டேன்.

லிகு : என்ன இப்படித் திடீரென்று...

கலி : ஐயோ, நம் திட்டப்படி வேறு எவனோ மடப்பயலையல்லவா அவளிடம் அனுப்பப் போகிறோம்? இதற்காகவா நாம் இவ்வளவு திட்டமிட்டோம்?