பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

133


கலி : அப்புறம்?

லிகு : நாங்கள் மாறு வேடத்துடன் வருகிறோம். நீர் பைத்தியக்காரப் பயலைப் போல் தெருவில் வாரும். உம்மைப் பிடித்துக்கொண்டு போகிறோம்.

கலி : பிறகு நான் என்ன செய்வது?

லிகு : அது உம் காரியம். உம் சாமர்த்தியம் அதில் எங்களுக்கென்ன இருக்கிறதய்யா?

கலி : என்னதான் சொல்லுகிறாய்?

லிகு : அந்தப் பத்தினி அன்றிரவு உன் விருப்பத்திற்கு இணங்கி விடுவாள். உம் நெடுநாள் ஆவல் நிறைவேறியதும் அவளிடமிருந்து பிரிந்து வருவதற்கு முன்னால், நீர் யாரென்று தெரிவித்து உம் அளப்பரும் காதலையும் எடுத்துக் கூறும். அவ்வாறு கூறி அவளை என்றும் உமக்கு இணங்கிய வளாக்குவது உம் கெட்டிக்காரத்தனத்தைப் பொறுத்தது. அவளும், உம்முடன் இருப்பது இதுவே கடைசியிரவாக இருக்க வேண்டுமென்று விரும்பமாட்டாள்.

கலி : உண்மையாகவா?

லிகு : ஆம்! மருந்தைச் சீக்கிரம் கொடுத்தனுப்பும். நான் வருகிறேன். எல்லாம் நான் சொன்னபடி நடக்கட்டும்.

(போகிறான்)

(அன்று இரவு பத்து மணி சுமாருக்கு, மெசர் நிக்கியா பிரபு, தரகன் வேலைக்காரன் சிரோ ஆகியோர் மாறு வேடத்துடன் தெருவிற் போகிறார்கள்._ஒரு மூலையிலிருந்து வாலிபன் கலிமாக்கோ பிச்சைக்காரனைப் போல் வருகிறான். அவன்மீது பாய்ந்து பிடித்துக் கண்ணைக் கட்டி இருட்டில் இழுத்துச் செல்லுகிற்ார்கள். நிக்கியாவின் வீட்டில், பத்தினி லுக்கிரிசியாவின் பள்ளியறைக்குள் வாலிபன் கலிமக்கோ தள்ளப்படுகிறான். அறைக் கதவு சாத்தப்படுகிறது)