பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

படை

குடிமக்களையே தன் படைவீரர்களாகப் பெற்றுள்ள ஓர் ஆட்சியாளன் வேறு எந்தக் கொடிய பகைவருக்கும் அஞ்ச வேண்டியதில்லை.

படைபலம் படைத்த திர்க்கதரிசிகள் அனைவரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். படை பலமற்றவர்களே தோல்வியடைந்திருக்கிறார்கள்.

படைப் பயிற்சியைவிட இன்பக் கேளிக்கைகளையே பெரிதாக மதிக்கிற ஆட்சியாளர்கள், அதிரைவில் தங்கள் ராஜ்யத்தை இழந்து விடுவார்கள்.

இராணுவத்தினருக்கு இலஞ்சம் கொடுத்து ஆட்சி பீடம் ஏறியவர்கள் பெருந்திறமைசாலிகளாக இருந்தாலொழிய அந்தப் பீட்த்தில் நிலைத்திருக்க முடியாது.

பட்டங்கள்

பட்டங்கள் மனிதர்களுக்குக் கெளரவம் அளிப்பதில்லை. மனிதர்கள்தான் பட்டங்களுக்கு கெளரவமளிக்கிறார்கள்.

பயமுறுத்தல்

யாரைպւե பமுறுத்தவோ, அல்லது பழிக்கவோ செய்யாமல் ஒருவன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்வானாகில், அது அவனிடமுள்ள மாபெரும் புத்திசாலித்தனத்தின் அறிகுறியெனக் கருதுகிறேன். ஏனெனில், பயமுறுத்துவது, பழிப்பது, இவை இரண்டில் எதுவும் எதிரியைப் பலஹீனப் படுத்திவிடுவதில்லை. அதற்கு மாறாக, ஒன்று அதிக எச்சரிக்கையுடன் அவனை விழித்திருக்கச் செய்கிறது: மற்றொன்று அவனுக்குத் தீராக் குரோதத்தையும் பழிவாங்கும் வெறியையும் தூண்டிவிடுகிறது.

பழி வாங்குதல்

சாதாரண மனிதர்கள் சிறு தீமைகளுக்குத்தான் நம்மைப் பழி வாங்குவார்கள். பெருந் தீமைகளுக்குத் தகுந்தப்டி பழி வாங்க முடியாத நிலைமையில் அவர்கள் இருப்பார்கள்.

பிரபுக்கள்

வேலை செய்யும் தேவை எதுவுமில்லாமல், தங்களுடைய அவனவற்ற நிலபுலன்களிலிருந்து வரும் வாடகையைக் கொண்டு சோம்பேறித் தனமாக

வாழுபவர்களைத் தான் பிரபுக்கள் என நாம் அழைக்கிறோம்.