பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

திறமையால் கிடைத்த புதிய அரசுகள் :

(மனிதர்கள் தங்களுக்கு முந்தியவர்களின் செயல்களையே பாவனை செய்து பின்பற்றி அவர்கள் அடிவைத்துச் சென்ற பாதையிலேயே எப்பொழுதும் செல்கிறார்கள்) மற்றவர்களை எப்பொழுதும் சரியாகப் பின்பற்ற முடியாததாலும், தாங்கள் யாருடைய செயல்களைப் பின்பற்றுகிறார்களோ அவர்களளவு காரியங்களைத் திறம்படச் செய்ய முடியாததாலும், புத்திசாலியான ஒருவன் எப்பொழுதும் மிகப்பெரிய மனிதர்கள் அடிவைத்துச் சென்ற பாதையிலேயே போகவேண்டும்: மிகத்திறமையுடையவர்களின் செயல்களையே பின்பற்ற வேண்டும். அப்படிச் செய்வதால் அவன் அவர்களுடைய பெருமையைத் தான் அடைய முடியாவிட்டாலும் அதில் ஒரு சிறு அளவையாவது அடையமுடியும். கெட்டிக்காரர்களான வில் வீரர்கள், மிகத்தூரத்தில் உள்ள ஒரு பொருளை எய்ய விரும்பும்போது, தங்கள் வில்லினால் எவ்வளவு தூரம் எய்ய முடியும் என்பதைத் தெரிந்து கொண்டு, அந்தக் குறிக்கும் மேலான உயரத்தில் உள்ள ஓர் இடத்தைக் குறிவைத்துக் கொண்டு அம்பெய்வார்கள். அவ்வளவு உயரத்திற்குத் தங்கள் அம்பு செல்லாது என்றாலும், அதற்குக் கீழான தாங்கள் விரும்புகின்ற குறியை எய்வதற்கு இந்த முறை பயன்படும். அதுபோல்தான் (மனிதர்கள் மிகப் பெரிய மனிதர்களைப் பின்பற்ற முயல வேண்டும்)

ஒரு புதிய அரசன் இருக்கக் கூடிய புதிய அரசுகளை, ஏறத்தாழ அவனுடைய திறமைக்குத் தகுந்தபடி தன் பிடியில் வைத்திருப்பது எளிதாக இருக்கும். மிகத் திறமையுள்ளவன் மிக எளிதாகவும். குறைந்த திறமையுள்ளவன் சாதாரணமாகவும் அவற்றைத் தன் பிடியில் வைத்திருக்கலாம். தனிப்பட்ட மனிதன் ஒருவன் அரசனாகும்போது அவனிடம் பெருந்திறமையோ அல்லது நல்லதிர்ஷ்டமோ இவற்றில் ஏதாவதொன்றோ இருக்குமானால் பல கஷ்டங்களைக் குறைத்துக் கொள்ளலாம். நல்லதிர்ஷ்டம் குறையாக உள்ளவர்கள் கூடத் தங்கள் ராஜ்யங்களைச் சிறப்பாக நடத்தியிருக்கிறார்கள். அரசன் அந்த ராஜ்ய எல்லைக்குள்ளேயே தங்கினால் காரியம் மேலும் இலகுவாகும்.

சந்தர்ப்பங்கள் மனிதர்களுக்கு வாய்ப்பை அளிக்கின்றன. அவர்களுடைய பெரும் பண்புகள் அவற்றைக் கொண்டு அவர்கள் பலன் அடைய உதவுகின்றன. இதனால்