பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
viii


தவத்திரு அடிகளாரே ஒரு இயக்கம்; அவர் ஒரு தனி மனிதரல்லர்.

அவர்கள் அருளிய கருத்து மணிகளில் பலவற்றைத் தேர்ந்து எடுத்து, நூல் வடிவில் கொண்டு வந்துள்ள நண்பர் சீனி. திருநாவுக்கரசு ஒரு கவிஞர்.

“ஆய்வு இல்லாத பணியில் வளர்ச்சி இராது (1404); பொது மக்கள் ஏமாளிகளாக இருக்கும்வரை ஆட்சியாளர்கள் யோக்கியர்களாக மாட்டார்கள் (862); தவறுகளை நியாயப்படுத்துவதே குற்றம். சமயங்கள் மாறுபடா; சமயவாதிகள் மாறுபடுவர் (533)”. இவை கவிஞர் சீனி திருநாவுக்கரசு அவர்கள் தேர்ந்து எடுத்து நமக்களித்துள்ள மணிகளில் சில.

தவத்திரு அடிகளாரின் கருத்து மணிகள் செறிந்து மிளிரும் இந்த அரிய நூலைத் தமிழினம் ஏற்றுப் பயனடையும் என்பதில் நம்பிக்கை எனக்குண்டு.

பழங்களைச் சுவைத்துப் பார்த்து, நல்ல பழங் களை மட்டுமே காவிய நாயகன் இராமனுக்கு நல்கி மகிழ்ந்த மாது சபரியைப் போல, நல்ல நூல்கள் எவை எனத்தேர்ந்தெடுத்து பதிப்பித்து நாட்டுக்களித்து வரும் அன்பு நண்பர் கவிஞர் சீனி. திருநாவுக்கரசு அனைவரின் பாராட்டுக்கும் உரியவர். -

கலைவாணிப் பதிப்பகத்தின் மற்றுமோர் நல்ல முத்தான இதற்கு மக்களிடையே மாபெரும் வரவேற் பிருக்கும் என்பது திண்ணம்.

சென்னை.14

அன்பன்,
வீ. செ. கந்தசாமி