பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

தவத்திரு அடிகளார்



862. “பொது மக்கள் ஏமாளிகளாக இருக்கும் வரை ஆட்சியாளர்கள் யோக்கியர்களாக மாட்டார்கள்.”

863. “பணத்தின் மதிப்பு, அல்லது விலை ஒரே மாதிரியாக இருக்கும் என்று கருதித் திட்டமிடுதல் கூடாது. பண வீக்கம் கவனத்தில் இருக்கவேண்டும்.

864. “உற்பத்தியாளனாக மாறினால் ஒழிய வாழ்க்கைத் தரம் நிலைத்து நிற்காது.”

865. “ஒருவரை மறைத்து ஒருவர் சொல்லும் சொற்களைக் கேளாதொழிக!

866. “தற்சலுகையற்ற சுயமதிப்பீட்டிலும் சிறந்த ஆசிரியன் இல்லை.”

867. “உணர்வு பூர்வமான செயல்முறைப்பட்ட சமூக வாழ்வு தோன்றினால் சமுதாயம் நன்றாக அமையும்.”

868. “ஆரவார அரசியலில் உள்ள கவர்ச்சி ஆக்கப் பணிகளுக்கு இருப்பதில்லை.”

869. “விநாடிகளைக் கணக்கிட்டுக் காரியங்கள் செய்தலே வாழும் முறை.”

870. “அன்றாட வாழ்க்கையில் திருக்கோயிலையும் சமூகத்தையும் இணைத்து வாழ்தலே சிறந்த வாழ்வு.”

871. “உயிர்ப்பும் உணர்வும் செயலில் கலக்குமானால் வெற்றி உறுதி.”

872. “திட்டமிடும் பொழுதே எதிர்கால வரலாற்றுப் போக்கை உய்த்துணர்ந்து திட்டமிடல் நல்லது.”