பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

தவத்திரு அடிகளார்



885. “ஏழைகள், எளிதில் எதையும் விற்பர்.”

886. “இன்றைய ஆசிரியர்களுக்குப் பொறுப்பு உணர்வு வந்துவிட்டால் நாட்டின் முன்னேற்றம் உறுதி.”

887. “ஜனநாயக அமைப்பு என்பது கலந்து பேசுவது என்பது. ஆனால், அந்த அமைப்பிற்க்குள்ளேயே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமலேயே பலர் உள்ளனர்.”

888. “இனியன பேசுதல் எல்லாவற்றையும் கூட்டுவிக்கும்.”

889. “காலத்தை ஒழுங்குப்படுத்தி - காலத்திற்குரிய பணிகளையும் ஒழுங்குப்படுத்தினால் நிறையப் பணிகளைச் செய்யலாம்.”

890. “படைப்பாற்றல் உடைய கல்வியே கல்வி.”

891. “கற்றுக் கொண்டே இருப்பது அறி ஆற்றினைத் துார்க்காமல் தந்து கொண்டிருக்கும்.”

892. “தொழிற் புரட்சி ஏற்படும் நாடே வளரும் - வாழும்.”

893. “புகழ்ந்தே காரியம் சாதித்துக் கொள்ளும் மக்கள் புத்திசாலிகள்.”

894. “தற்காலிகத் தேவைகளை ஒத்திப் போட்டால் நீண்ட காலத் தேவைகளை அடையலாம்.”

895. “செல்வத்தை முதலீடாக்கும் முயற்சியே முயற்சி.”

896. “சமூகத்தில் தாய்க்கு இருக்கும் பொறுப்பு உணர்வு, தந்தைக்கு வருவதில்லை."