பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/109

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

99



897. “அசட்டுத் துணிச்சல் - அவலத்தையே தரும். அறிவாராய்ந்த துணிவு வெற்றிகளைக் குவிக்கும்.”

898. “பிறருக்குக் கொடுக்காதே எனக்குக் கொடு என்பவன், தேவைக்குக் கேட்கவில்லை, அடுத்தவனுக்குக் கிடைக்கக் கூடாது என்பதற்காகவே கேட்கிறான்.”

899. “விருப்பத்துடன் உழைத்தலே உயர் வாழ்வுக்கு அடித்தளம்.”

900. “சமுதாய மாற்றங்கள் நிகழ்த்தும் ஆற்றலே பயனுடைய ஆற்றல்.”

901. “இன்றைய தேர்தல் முறையில்-புத்தரால் கூட லஞ்சம் வாங்காமல் இருக்கமுடியாது.”

902. “எந்த ஒரு தீமையும் - மருந்தெனத் தொடங்கிப் பழக்கமாகிவிட்டனவே யாம்.”

903. “வெளிப்படையாக நமது உறவைச் சொல்லிக் கொள்ள வெட்கப்படுபவர்கள் சுய லாபத்துக்காக மட்டுமே உறவு காட்டுகிறார்கள்.”

904. “ஆசிரியர், மாணாக்கரை அறிவால் வளர்க்கும் கடமை உடையவர்.”

905. “சூழ்நிலைகள் மீது பழி போடுகிறவர்கள் செயலற்றவர்கள்.”

906. “சூழ்நிலைகளை எதிர்த்துப் போராடுவதே வாழ்க்கையின் வளர்ச்சிக்கு உத்தி.”

907. “பலன் எதிர்பார்க்காமல் செய்யும் பணியே பணியாகும்.”