சிந்தனைத் துளிகள்
101
919. “சடங்குகளால் எளிதில் மக்கள் கூடுகிறார்கள்.”
920. “காலந் தாழ்த்தி வருவது கெளரவம் என்றான பிறகு நாடு உருப்படாது.”
921. “இறையருளால் கூட்டுவிக்கும் மனம். ஆதலால் திருமணம்.”
922. “மாயா வாத, பெளத்த, சமணக் கலப்பிற்குப் பிறகே தமிழர் வாழ்க்கையில் வாழ்க்கையைப் பற்றிய இழிவு உணர்வு தோன்றியது.”
923. “தந்தை-தாயார் கொண்டாடுவது பிறந்த நாள். மனைவி கொண்டாடுவது திருமண நாள். சமுதாயம் கொண்டாடுவது பயன் கண்ட நாள் அல்லது பொதுவாக இறந்த நாள்.”
924. “அரசியல்வாதிகள் சுற்றுலா வராத கிராமங்களில் வேலை செய்வது எளிது.”
925. “அண்ணா கையில் புதிய அ.தி.மு.க. கொடி. எத்தனை கொடிகளைத்தான் அவர் பிடிப்பார்!”
926. “பயிற்சியில் வளர்வது பண்பாடு.”
927. “பெண்களால் ஒருமைப்பாட்டை வளர்க்க முடியும்.”
928. “ஆணுக்கு அன்புடைய மாமனும் மாமியும் வாய்த்து விடுகிறார்கள்! பெண்ணுக்கு அப்படி வாய்ப்பதில்லை.”
929. “காதல் மலர்வதற்குரிய வாயில்கள் இன்று இல்லை.”
930. “ஒரு நிலைப்பட்டு ஒருவருக்குத் துணையாக அர்ப்பணிப்பு உணர்வுடன் வாழ்வது கற்புநிலை.
931. “சென்னை நகரத்தில் மட்டும் 119000 ஏழைகள் வாழ்கிறார்கள்”.