பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

தவத்திரு அடிகளார்



955. “உழைப்பில் பாதியே நுகர்தற்கு உரியது என்பதால் இரண்டு கை; ஒரு வயிறு.”

956. “பொறுப்பை உணர்த்துகிறவர்கள் பொதியைச் சுமப்பார்கள்.”

957. “தனிமனிதர்களுக்கிடையில் உருவாகும் பகைமையில் கூட ஒருவர் ஒருவரை அழிக்க வாய்ப்பில்லாமல் தடுப்பதே அரசு.”

958. “இருபதாம் நூற்றாண்டில் நெருக்கடிகளை அரசின் துணை கொண்டு மாயாவாதம் தமிழ் நெறியை முறியடிக்கிறது.”

959. “அவரவர் நலனில் உள்ள அக்கறை அளவுக்கு, அவரவர் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும் பொது நலனில் அக்கரை ஏற்பட்டால் உலகு செழிக்கும்.”

960. “மரத்திலிருந்து கொய்து எடுக்கக்கூடாது, கனி. கொய்யக்கனி'யாயிற்று.”

961. “ஒவ்வொருவரும் தனித்தனியே அவர்கள் வழங்கும் அன்பை அறியவேண்டும் என்று ஆர்வம் காட்டுகின்றனர். காலம், ஒத்துழைப்பதில்லை.”

962. “எதிர்ப்பு நல்லது; எதிரி நல்லதன்று.”

963. “தீமை செய்ய வலிமை அவசியமில்லை. சின்னச் சின்னப் பூச்சிகள் கூட நோயை பெருக்கு கின்றன.”

964. “உடல் வருந்த உழைத்தாலே, நோய், அணுகாது.”

965. “ஆங்கில வைத்திய முறையில் பத்தியம். இல்லை. பத்தியமில்லா வைத்தியம் நோயைத் தணிக்கலாம். நோயின் காரணங்கள் நீங்கா.”