சிந்தனைத் துளிகள்
105
966. “ஏழைகளுக்குத் துன்பம் பழகிப் போனதால் முன்னேற்றத்தைப் பற்றிக் கவலைப்பட மறுக்கிறார்கள்.”
967. “பணம் சம்பாதிப்பவர்கள் தம் காரியத்திலேயே குறியாக இருப்பார்கள்; நாம் ஏமாறக் கூடாது.”
968. “செல்வத்தின் அருமை தெரியாதவர்கள் செலவினங்களைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.”
969. “சொன்னதைச் செய்யவே நபர்களைக் கானோம். சுய சிந்தனையுடையவர்கள் எங்ஙனம் கிடைப்பார்கள்?”
970. “கடனைக் கழிப்பது என்ற உணர்வில் செய்யப் பெறும் வேலை பயன் தராது.”
971. “மருந்துமலை, மருத்துவரிடம் சென்றது போல் சிவாச்சாரியார்கள் மந்திர மாயங்களுக்குச் செல்கின்றனர்.”
972. “கவலை’க்கு இடம் தருவது அழிவுக்கு வழி.”
973. “கரு உற்றிருக்கும் தாய், பிரசவ வேதனைக்கு ஆளானாலே குழந்தை பிறக்கும்; அதுபோல முன்னேற விரும்புகிறவர்கள் போராட்ட உணர்வுடன் கடுமையாக உழைக்கவேண்டும்.”
974. “வேலை வாங்குவதைவிட வேலை செய்வது கடினம்.”
975. “பெண் வலியவே அடிமையாகிறாள்.”
976. “வயிறு இல்லாது போனால் பலர் உழைக்கவே மாட்டார்கள்.”
977. “மற்றவர் தொல்லை அறியாதவர்கள் மூடர்கள்.”