சிந்தனைத் துளிகள்
107
992. “எழுச்சி நிறைந்த படைப்பாற்றல் மிக்கதே கல்வி.”
993. “ஆசிரியர்களின் பொறுப்பின்மையினாலேயே, சமூக வரலாற்றில் தரம் குறைந்து வருகிறது.”
994. “மனிதனின் முதலும், முடிவுமான தேவை அறிவே.”
995. "படிப்பறிவை விட, பட்டறிவு அதிகப் பயன் தரும்.”
996. “புத்தகங்களிலும் போதனாக் கருவிகள் விலை மதிப்புள்ளவை.”
997. “வகுப்பறைக்குள் போதிப்பதைவிட வகுப்பறைக்கு வெளியே நிறைய கற்பிக்கலாம்.”
998. “உண்மையைக் கண்டுபிடித்தல் எளிதன்று.”
999. “சூழ்நிலைக்கு இரையாதல் விலங்கு இயல். சூழ்நிலையைத் தனக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ளப் போராடுதல் மனித இயல்.”
1000. “உடம்பிற்கு உழைப்பின்மை, நோய். உறவுக்கு, அழுக்காறு நோய்.”
1001. “ஒற்றுமை நல்லதுதான்! ஆனால், எதற்காக ஒற்றுமை? அடுத்த சமூகத்தின் மீது தாக்குதல் செய்ய ஒற்றுமை உருவானால் நன்றன்று. நாடு, ஊர் அளவில் ஒற்றுமை உருவாதலில் ஒரளவு நன்மை உண்டு.”
1002. “துன்பங்களைத் தவிர்த்துக் கொள்ளாதவன் அறிவில்லாதவன்.”
1003. “பாரதம்” தொடர்கிறது ஒத்திவைப்பதில்.”