பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/118

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

தவத்திரு அடிகளார்



1004. “கையூட்டுகள் கொடுத்து காரியம் சாதிக்கும் வசதியுள்ளவர்கள் உள்ளவரையில், பூட்டினை ஒழிக்க முடியாது.”

1005. “அரசு அலுவலகங்கள் சுறுசுறுப்பாக இயங்கினால் கையூட்டைத் தவிர்க்கலாம்.”

1006. “தேர்தலில் பணம் விளையாடுவதைத் தவிர்த்தாலே, நாடு வாழும்.”

1007. “அரசியல்வாதிகள் வாங்கும் இலஞ்சமே, நாட்டில் இலஞ்சத்தை வளர்க்கிறது.”

1008. “விலைவாசி ஏற்றம் அரசின் செயலின்மையைக் காட்டுகிறது.”

1009. “அன்று இராவணன் சீதையைத் தூக்கியது போல், சட்ட மன்ற உறுப்பினர்கள் தூக்கப்படுகிறார்கள்.” இல்லை, இராவணன் தூக்கிய சீதை பதிவிரதை, “சட்டமன்ற உறுப்பினர்கள் அப்படியல்லவே!”

1010. “மக்களாட்சி நடைபெறும் நாட்டில் அரசு இயந்திரத்தை பலவீனப்படுத்தக் கூடாது; அரசு அலுவலர்கள் மதிக்கப்படுதல் வேண்டும்.”

1011. “இன்று இந்தியாவில் 90% பேருக்கு வாழ்தல் குறிக்கோள் அல்ல. பிழைப்பு நடத்தவே விரும்புகின்றனர்.”

1012. “தடைகளைக் கடந்தும் தொழில் செய்யும் உணர்வு நிறைந்த உழைப்புக்குப் பெயர் முயற்சி.”

1013. “இன்றைய நாட்டில் அரசுக்கு உந்துசக்தியாக விளங்குபவர்கள் வியாபாரிகளே! அதனால் விலை ஏறுகிறது.”

1014. “வாழ்நாள் முழுதும் படித்தல் வேண்டும், இடையீடின்றிப் படித்தல் வேண்டும்.”