பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

109



1015. “பொறுப்பை ஏற்கத் தயங்குகிறவர்கள் யாதொரு பணிக்கும் பயன்படமாட்டார்கள்.”

1016. “ஒழுங்கமைவு பெற்ற வாழ்க்கை வெற்றி.”

1017. “சமூக நலனுக்காகத் தன்னை அழித்துக் கொள்கிறவர்கள் பாக்கியவான்கள்.”

1018. “கசப்புணர்ச்சியும் காழ்ப்புணர்ச்சியும் இல்லாத சமுதாயம் காணும் முயற்சி தேவை.

1019. “விலை போகிறவர்கள் உள்ள வரை துரோகம் ஒரு தொடர்கதை.”

1020. “கெட்டிக்காரத் தனத்தில் நூறு காரியம் செய்வதைவிட ஒரு நல்ல காரியம் இயல்பாகச் செய்வது பெருமைக்குரியது.”

1021. “தமிழின வரலாற்றில் இன ஒருமைப் பாட்டுக்காக வாழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா ஒருவர் தான்.”

1022. மற்றவர்களைப் புகழும்பொழுது தன்னையும் இணைத்துக் கொள்பவர்கள், மற்றவர்கள் புகழ வாழ இயலாது.

1023. “ஒரு தலைவனுக்குச் சிறந்த நினைவு அவர்தம் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதுதான்.”

1024. “நோய் இயற்கையன்று; செயற்கையே.”

1025. “தீய எண்ணங்கள் காலப்போக்கில் உடலின் செங்குருதியையே நச்சுத் தன்மை அடையச் செய்துவிடுகிறது.”

1026. “அன்பினால் நிறைந்த இதயம் உள்ளவர்கள், சிரித்து மகிழ்ந்து வாழ்வார்கள்."