பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/120

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

தவத்திரு அடிகளார்



1027. “கடவுளை நம்பாமையே ஒரு பாவமன்று. மற்றவர்களைப் பற்றி கவலைப்படாத ஆசைகளே பாவத்தின் பாற்பட்டவையாகும்.”

1028. “மலருக்குக் கேடு செய்யாமல், தேனி தேனை எடுக்கிறது. அதுபோலச் செல்வத்தை ஈட்டதல் வேண்டும்.”

1029. “மதம், தொழிலாகவும் பிழைப்பாகவும் மாறியதன் விளைவு நாஸ்திகம்.”

1030. “நாள்தோறும் வாழ்பவர்கள் எளிதில் முதுமையடைவதில்லை. பலர் நேற்று மட்டுமே வாழ்ந்தவர்கள்.”

1031. “நல்ல சுற்றம் அமைதல், புகழ் மிக்க வாழ்வுக்கு அடிப்படை.”

1032. “ஒராயிரம் ஆண்டுகளுக்கு கூடத் தமிழ் மரபுகள் பேணமுடியாத அளவுக்குப் பலவீனப் படுகின்றோம்.”

1033. “சங்கரமடம், சமுதாய அளவில் மேவி வருவது, தமிழ் மரபு வளர்ச்சிக்குத் துணை செய்யாது.”

1034. “கீதையும் திருக்குறளும் நமது மறை என்று கூறுவது பேதைமை.”

1035. “மக்கள், இலக்கியம், கலை, இசைஇவற்றை அனுபவிக்கக் கற்றுக் கொண்டால் நல்லவர்கள் ஆகிவிடுவார்கள்.”

1036. “குடும்ப நலத் திட்டத்திற்கு செலவழிக்கும் தொகையை, கலை வளர்ச்சிக்குச் செலவழித்தால் நல்ல குடும்பம் இயல்பாகவே அமையும்.