பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

117



1996. “மற்றவர்களிடம் பொறுப்புக் கொடுப்பது எளிது. ஆனால் பொறுப்பு ஏற்பதே முறை.”

1097. “சாம்பிராணிப் புகையை நுகர்ந்தால் கேடு: புகையின் மனத்தை மட்டும் நுகர்ந்தால் நலம்.”

1098. “பகுத்தறிவு, பேச்சுப் பொருள் அல்ல; அது ஒரு வாழ்க்கை முறை.”

1099. “எப்போதும் உழைப்புக்குரிய ஆயத்த நிலையில் இருப்பதே-விழித்திருத்தல்.”

1100. “பல நாள் உழாத நிலம் பாறையாகிறது. பலநாள் அறிவால் உழப்படாத மனிதர் புலன்கள் கல்லாகிவிடுகின்றன.”

1101. “சட்டத்தை எளிதில் விமர்சனம் செய்யலாம்; ஆனால் ஏற்று ஒழுகுதல் கடினம்.”

1102. “சட்டங்கன் நன்மையை வளர்க்கும் தன்மை உடையன அல்ல; தீமையை தடுக்கும் நோக்க முடையனவேயாம்.”

1103. “பூட்டுக்களை நம்புகிறவர்கள். மற்றவர்கள் யோக்கியத் தன்மையை நம்புவதாக நடிப்பது ஏன்?”

1104. “அன்பும், அறனும் கலவாத வாழ்க்கையில் பிறக்கும் குழந்தைகளை வளர்க்க, சிறந்த பள்ளிகளும்-ஊரும் தேவை.”?

1105. “ஆசைப்படுகின்றனர்! ஆனால், ஆளுமைக்கு அஞ்சுகின்றனர்.”

1106. “உழைத்து வாழாத வாழ்க்கை, விபசாரம்.”

1107. “உடல் உறுப்புக்களில் ஒன்று குறைந்தாலும் சங்கடப்படுபவர்கள், திருந்த வேலை செய்கிறார்கள் இல்லையே!”