பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/128

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

தவத்திரு அடிகளார்



1108. “பொருளாதார ஆதிபத்தியப் போட்டிகள் உலகந் தழுவியதாக வளர்ந்து வருகின்றது.”

1109. “சார்ந்தே வாழ்பவர்கள், நடுநிலையாளர்களை வாழ அனுமதிக்க வேண்டும்.”

1110. “இந்திய அரசியல் வாதிகள் ஆதாயம் தேடும் மனப்போக்கு, சோரம் போகும் நிலை ஆகியவற்றின் காரணமாக இந்தியாவிற்கு ஜனாதிபதி ஆட்சி முறை தேவையாகிவிடும்.”

1111. “சாதாரண பயன்படாத குடிசையைக் கூட யாரும் இழக்கத் தயாராக இல்லை.”

1112. “பொறிகளை, இன்ப நுகர்வில் பக்குவப்படுத்துவது கலை.”

1113. “எவ்வளவு திறமையாகக் காரியம் செய் தாலும் தொடர்ச்சி இல்லையானால் பயன் இல்லை.”

1114. “காலமறிந்து செய்யாத கடமைகள் உரிய பயனை தாரா.”

1115. “ஒரு கருத்தில் ஊன்றாதவர்கள் சுற்றிச் சுற்றி வருவர்.”

1116. “இறைவன் வாழ்த்துப் பொருள் அல்ல. வாழ்வுப் பொருள்.”

1117. “இன்று வாழ்கின்றவர்கள், வரலாற்றுப் போக்கில் வந்தமைந்த வாழ்க்கை. அமைப்புக்களை அடுத்த தலைமுறையினருக்கு அப்படியே விட்டு வைத்தல் கடனாகும்.”

1118. “சைவத்திற்கு சிறப்பு சேர்க்க நால்வர் வழிபாடு தேவை.”