சிந்தனைத் துளிகள்
125
1187. “எந்த ஒன்றையும் தீர ஆய்வு செய்யாமல்-செய்வது இழப்பை தரும்.”
1188. “நிர்வாகப் போக்கில் ஆய்வு செய்வது-வளர்ச்சிக்குத் துணை செய்ய இந்த ஆய்வுக்கு ‘நம்பிக்கை’ என்ற தத்துவம் தடையாக அமைதல் கூடாது.”
1189. “ஒரு பணியில் ஒருவரை தொடர்ந்து ஈடுபடுத்துதல்-கேட்டுக்கு வழி வகுக்கும்.”
1190. “தடை இல்லாத வண்டியும் ஆய்வு இல்லாத நிர்வாகமும் விபத்துக்களைத் தோற்று விக்கும்.”
1191. “ஆசை-ஆத்திரம் தகுதிகளின் அடிப்படையில் தோன்றுவதில்லை.”
1192. “இனம் - மொழியின் அடிப்படையில் தோன்றி நிலவும் வழக்கு-இது உலக வழக்கு சாதி மத அடிப்படையில், இனம் இருத்தல் இயலாது, கூடாது”
1193. “சாதி’ பிறப்பின்பாற்பட்டது. இது அயல் வழக்கு: தமிழ் வழக்கன்று. நீதிக்கும் வளர்ச்சிக்கும் புறம்பானது.”
1194. “குலம்’ வழி வழி வரும் மரபு. இது ஏற்புடையது. மரபு வழியும் சூழ்நிலையின் தாக்கமும் தவிர்க்க இயலாதன.”
1195. மதம்-மடம் ஆகிய அமைப்புக்கள் அப்பட்டமான சாதியமைப்புக்களே! இங்கெல்லாம் புதுமையை எதிர்பார்த்தல் இயலாது.
I196. “மேய்ப்பார் இல்லாத மாடுபோல கண்காணிப்பு இல்லாத நிர்வாகக் கெடும்.”