பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/137

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

127



1208. “மதிப்பு, மதியாதை என்பது விலை கூடுதலுக்குரியது என்ற நிலை பொய்ம்மையை வளர்க்கும்”

1209. “காலம், உழைப்பு, பயன்படுத்தப்படும் பொருள்கள் இவற்றின் கூட்டு மதிப்புக்குரியன. திரும்பக் கிடைக்காத எதுவும் இழப்பையே தரும்.”

1210. “வாழ்க்கையும் ஒருவகை வியாபாரமே. வாழ்தலுக்குரிய செலவை விட அடைதல் கூடுதலாக வேண்டும். இதுவே ஊதியம் நிறைந்த வாழ்க்கை.”

1211. “பண்பாடில்லாதவர் அதிகாரம் பெறுதல், குரங்கு கையில் கொள்ளி பெற்றது போலாகும்.”

1212. “நிர்வாகம் என்பது காலம், இடம், பொருள், உழைப்பு இவற்றை முறைப்படுத்திப் பயன் படுத்திப் பயன் கொள்ளுதலாகும்.”

1213. “கோப்புகள் குறிக்கோளுடையனவாக இயக்கப் பெறாது போனால் இழப்பேயாம்.”

1214. “கண்ணால் காண்பது, காதால் கேட்பது ஆகியன மூலம் தொடர்ச்சியான செயலூக்கத்தைப் பெறாதவர்கள் இருந்தாலும் இறந்தவர்களேயாவர்.”

1215. “சரியான நேரத்தில் சரியான தகவலைத் தருதல் நிர்வாகத்திற்கு வலிமையைச் சேர்க்கும். ஆக்கத்தினைத் தரும்; இழப்புக்களைத் தவிர்க்கும்.”

1216. “முக்காலி மூன்றுகாலுடையது. இதில் ஒருகால் உடைந்தாலும் பயன் இல்லை. அதுபோலக் கூட்டமைப்பில் தனி ஒருவரின் பலவீனம் கூட பாதிப்புகளைத் தரும்.”

1217. “அறிவியல், உழைப்பை எளிமைப் படுத்திக் கொண்டு வருகிறது. ஆனால் வாழ்க்கையை அருமைப்படுத்திக் கொண்டு வ்ருகிறது.”