பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/139

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

129



1230. “எண்ணெய் தேய்த்துக் கொண்டு பின் சீயக்காய் கொண்டு கழுவி விடுவது போல், துய்ப்பைத் துறவால் கழுவவேண்டும்.”

1231. “சித்தாடுகிறவர்கள் நாம் விரும்புவதைக் கொடுத்தால் நம்பலாம்.”

1232. “ஊக்கம் என்பது செயலூக்கங்களேயாம்.”

1233. “ஒன்றையொன்று பிரியாத நிலையில் பிணைக்கப்பெற்ற பிணைப்பே வாழ்வளிக்கின்றன. அதுபோல சமூகம் பிணைக்கப் பெற்றால் தான் வாழ்வு சிறக்கும்.”

1234. “தவறுகள் செய்வதும் விளையாட்டாகி விட்ட விபரீதம் வளர்ந்து வருகிறது.”

1235. “பொறுப்பு உணர்வு கடைச்சரக்கன்று. வாழ்வின் படிப்புகளால் பெறுவது.”

1236. “உயர்வற உயரும் நிலையே நிலை. இதுவே வரவேற்கத்தக்கது.”

1237. “படிப்பறிவிலும் பட்டறிவு சிறந்தது.”

1238. “காய்தல்-குளிர்தல் என்ற நியதிகளை பொருள்களை மாற்றுகின்றன. ஆதலால், காய்தலும் குளிர்தலும் வாழ்க்கையை வளர்ப்பன.”

1239. “ஒழுங்காக அமைக்கப் பெற்ற பற்களே உணவை அறைக்க உதவுகின்றன. அதுபோல ஒழுங்கமைவுபட்ட உழைப்பே உணர்வுகளை வளர்க்கும்; ஆக்கத்தினை நல்கும்.

1240. “உடலமைவில் முதன்மை, இரண்டாம் நிலை என்ற நிலை எந்த உறுப்புக்கும் இல்லை.

த-9