பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/141

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

131



1250. “தன்னைப் போல மற்றவர்கள் என்று நினைக்காதவர்கள் சமூகத்தில் வாழ்வது விரும்பத் தக்கதல்ல.”

1251. “தேவையில்லாமல் பேசுவது பயனில் சொல் கூறுதலே.”

1252. “கறையான் தானாக விரும்பி முயன்று உழைத்து வீடு கட்டுவதில்லை. ஆனால் கட்டிய வீட்டில் எளிதில் குடி புகுகிறது.”

1253. “கட்டிய வீட்டின் அருமை தெரியாத கறையான் அதை அழிக்கிறது. அதுபோல நன்மையறி யாதவர்கள் நன்மையை அழிப்பார்கள்”.

1254. “பயத்தினினும் கேடு பிறிதொன்று இல்லை.”

1255. “வாயினால் முடிக்கக்கூடிய காரியத்தை எழுத்தினால் செய்யக்கூடாது.”

1256. “தொழிலில் இழப்பு என்று கூறி, தொழிலாளர்களுக்கு நல்ல ஊதியம் கொடுக்க மறுப்பது நல்ல நிர்வாகம் அல்ல.”

1257. “நிர்வாகம் என்ற அமைப்பே, சீருற நடத்தவே!”

1258. “எதையும் பொறுப்புடன் செய்ய முன் வராதவர்கள், மற்றவர்கள் மீது பழி போடுவர்.”

1259. “பலரோடு பழகுவதால் உதவிகள் செய்வதிலும் கொடையளிப்பதிலும்கூட சிக்கல் தோன்றும்.”

1260. “ஒவ்வொரு உறவும் பொறுப்புக்களையும் கடமைகளையும் கொண்டதேயாம்.”