பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/144

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

தவத்திரு அடிகளார்



1283. “சிறுசிறு பணிகளைக் கூட முறையாகச் செய்யாதவர்கள் கை நிறைய ஊதியம் எதிர்பார்க்கின்றனர்.”

1284. “ஒரு இனத்தின் ஒற்றுமை விருப்பமே இன்று ஐயப்பாட்டிற்கு உரியதாகிவிட்டது.”

1285. “மெய்ப்பொருள் உணர்தல் என்பது வேறு. கடவுள் வழிபாடு என்பது வேறு.”

1286. “மெய்ஞ்ஞானமும் மதமும் ஒன்றல்ல.”

1287. “மெய்ஞ்ஞானம் காண்பதுவே வாழ்க்கையின் குறிக்கோள்.”

1288. “விஞ்ஞானம் சுரண்டும் வர்க்கத்துக்குக் கூட, துணை போகிறது.”

1289. “விஞ்ஞானம் இயற்கையின் உள்ளீடுகளைக் கண்டு வாழ்க்கையின் அனுபவத்திற்குக் கொண்டு வரும் அரியப் பணியைச் செய்கிறது.”

1290. “விஞ்ஞானம் ஏவலனாக இருப்பது நன்று.”

1291. “விஞ்ஞானம் தலைமையாக மாறக் கூடாது.”

1292. “ஒருவருடைய சமயம் தொடர்பான நம்பிக்கைகள் - அவர்களுடைய வாழ்க்கையையும் - அந்த நாட்டின் சமூக வாழ்வையும் பாதிக்கச் செய்யும்.”

1293. “இந்திய சமூக வாழ்க்கையின் வறுமைக்கு மிகுதியும் காரணம் ஊழ் தத்துவங்களேயாம்.”

1294. “வரிசைப்படுதல் என்ற மரபு நல்லது.”

1295. “அவன் - அவளுடன் அதனைப் (இயற்கையை) பயன்படுத்தி வாழ்தலே- வாழ்க்கை."