பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/145

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

135



1296. “வல்லாங்கு வாழ்தல் எளிது. வாழ்வாங்கு வாழ்தல் அரிது.”

1297. “வானவர் உலகம் வளம் நிறைந்தது: ஆனால், பண்பாடற்றது.”

1298. “மனித வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது பண்பாடேயாம்.”

1299. “வாழ்க்கைக்கு மிகவுயர்ந்த குறிக்கோள் அமையாவிடில் வாழ்க்கை சிறத்தல் இயலாது.”

1300. “மற்றவர் வரம்பு உகந்த சுதந்திரத்தை எடுத்துக் கொள்வது வாழ்க்கையைக் கெடுக்கும்.”

1301. “தயவிலும் தவறுகள் நிகழ்வது உண்டு.”

1302. “அறிவொடும் - நடைமுறையொடும் பொருந்தாத் தயவு நன்றன்று.”

1303. “ஒவ்வொரு உயிரும் கடைசித் தருவாயிலும் கூட சுகித்திடவே விரும்பும்.”

1304. “மலைக்குப் பக்கத்தில் நிற்பதெல்லாம் மலையாகிவிடாது. அதுபோல பெரிய மனிதரைச் சேர்ந்தவர்கள் எல்லாம் பெரிய மனிதர்கள் இல்லை.”

1305. “ஒன்றை ஊக்கத்துடன் செய்தால் எளிதில் காரியம் முடியும்.”

1306. “செய்முறைகளுடன் பாடம் போதிக்கும் மரபு வழித் திருவுருவமே ஆலமர் கடவுள்.”

1307. “சட்டங்கள் வரையறையில் நிற்கும் அமைப்புக்கள் வழங்க இயலாது.”

1308. “நிதி மிகமிக உயர்ந்தது."