பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/147

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

137



1321. “அறு கயிறு ஊசலென்று மனம் அலைதல் கூடாது.”

1322. “மரண வாயிலிலும் வன்கண்மை உள்ளம் மாறாதவர்கள் வளர்ச்சி யடையாதவர்கள்.”

1323. “நாம் மட்டும் நல்லவர்களாக இருந்தால் போதாது. நம்மைச் சுற்றி இருப்பவர்களும் நல்லவர்களாக இருந்தாலே பயன் உண்டு.”

1324. “மற்றவர்களிடம் மேலாண்மை கொணர்வதே சரியான நிர்வாகத்திற்கு உதவியாக அமையும்.”

1325. “அடிமைப் புத்தியுடையவர்கள் சுதந்தரத்தை அனுபவிக்கமாட்டார்கள்.”

1326. “பிழைப்பு நடத்த விரும்புகிறவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள மாட்டார்கள்.”

1327. “காலத்தில் கண்காணித்தால் இழப்புக்களைத் தவிர்க்கலாம்: ஈட்டங்களைக் கூட்டலாம்.”

1328. “சிந்திப்பவன், சிந்திக்காதவன் சொல்லைக் கேட்பது பைத்தியக்காரத்தனம்.”

1329. “சிறு எல்லைகளைத்தான் சமாளிக்க இயலும்.”

1330. “காலம், பொன்-இரண்டையுமே அளந்து பயன்படுத்தி மிச்சம் பிடிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.”

1331. “மானிட உறவுகளைப் பராமரிப்பது பயன்களைத் தரும்.”

1332. “புகழை விரும்புகிறவர்களிடம், கஞ்சத் தனம் இல்லாமல் புகழ்ந்து பேசுக.”

1333. “வலிமையுடையார் தேடாது போனாலும் சென்று உறவு கொள்வர்.”