சிந்தனைத் துளிகள்
143
1390. “உழைக்காமல் சாப்பிடும் நிலப்பிரபுக்கள், படித்த அறிஞர்கள், பேச்சுக்குப் பணம் கேட்பதைக் குறை சொல்கிறார்கள்.”
1391. “ஒன்றைத் தொடர்ச்சியாகக் கண் காணிக்காது போனால், புதிய சிக்கல்கள் தோன்றும்.”
1392. “உழாத நிலம் கெடுவது போல, பழகாத உறவும் கெடும்.”
1393. “திறமையற்றவர்கள், நிர்வாகத் தலைமைக்கு ஆசைப்படுவது பயனற்றது.”
1394. “ஒன்றும் செய்யாதவர்களைவிட, செய்வது போல் பாவனை செய்கிறவர்கள் மோசமானவர்கள்.”
1395. “குழுக்களை உருவாக்க, சேர்க்க முயற்சிப்பவர்கள் ஏதோ ஒரு கொள்கைக்கு ஆயத்தம் செய்கிறார்கள் என்பதே கருத்து.”
1396. “நாலுபேர் உட்கார்ந்து பேசும் இடத்தில் கூட்டுச் சிந்தனை நிகழும் போது தனித்தும் பிரிந்தும் எண்ணுதல் சைத்தானின் செயல்.”
1397. “தற்காலிகமான உழைப்புக்களைக் காட்டிச் சமாளிப்பவர்கள் சிறு தூறல்களைப் போலத் தரையை நனைக்கலாம். அவர்களால் வளத்தையும் வெற்றியையும் தரவியலாது.”
1398. “ஒரு பணியில் ஈடுபட்டுள்ள பலர், ஒருவரை ஒருவர் எண்ணத்தாலும் செயலாலும் உறவாலும் நெருங்கி வராது போனால் அந்தப் பணி சிறப்பாக நடவாது.”
1399. “ஏகாதிபத்திய அரசுகளின் செயற்பாடு நாகரிகமாக இல்லை. கொலை செய்யும் அளவுக்கு