பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/154

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

தவத்திரு அடிகளார்


வந்துவிட்டனர். இனி இந்த உலகத்தை, கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.”

1400. “யாரை நம்புவத” என்ற வினா, மனித நாகரிகம் கெட்டு விட்டது என்பதன் அடையாளம்.”

1401. “வேலியே பயிரை மேய்கிறது; பாது காவலனே கொல்கிறான்! கலியுகத்தின் யதார்த்த நிலை!”

1402. “ஒரு தலைமை உருவாவதற்கு எவ்வளவு காலம் செலவு ஆகிறது? ஒரு நொடியில் கொலை செய்து விடுகிறார்கள் பாவிகள்.”

1403. “அன்னை இந்திரா, இந்திய நாட்டின் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் செய்த பணிகள் நினைந்து நினைந்து போற்றத்தக்கவை.”

1404. “விளக்காத பாத்திரம் தூய்மையாய் இராது. ஆய்வு இல்லாத பணியில் வளர்ச்சி இராது.”

1405. “கிராமச் சூழலில் குழந்தைகள் நன்கு வளர்க்கப்பட்டால் மேதைகள் வளர்வார்கள்; தோன்றுவார்கள்.”

1406. “அன்னை இந்திராவிடம் துணிவும் உறுதியும் இருந்தது! அதேபோழ்து நெகிழ்ந்து கொடுக்கும் மனப்போக்கும் இருந்தது.”

1407. “முதலாளித்துவம்” என்ற நஞ்சு உள்ள வரையில் நல்லவர்கள் வாழமுடியாது.”

1408. “முதலாளி வேறு; செல்வந்தர் வேறு.”

1409. “செல்வம் இல்லாத ஏழைகளில் கூட முதலாளிகள் உண்டு. இது ஒரு குணம்.”

1410. “பல, சிறு கடப்பாடுகள் முறையாக நிகழ்ந்தாலே பெரிய கடப்பாடுகள் தாமே நிகழும்.”