பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/156

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

தவத்திரு அடிகளார்



1422. “ஒரு எல்லை வரையில்தான் பொறுத்தாற்றும் பண்பு தீமை எல்லைக் கடக்கும் பொழுது கயமைத்தனமாகிவிடுகிறது! கொல்வதைத் தவிர வேறு வழியில்லை!”

1423. “பண்டும் இன்றும் என்றும் பரந்த மனப்பான்மை உலகியலில் அடைந்தது தோல்வியே!”

1424. “நல்லவர்களைவிட தீயவர்கள் நல்லவர்களாக நடிப்பது, கவர்ச்சியாக இருக்கிறது. மக்கள் மயங்குகின்றனர்.!

1425. “விடுப்பில் இருக்கும் விருப்பம், உழைப்பிலும் இருந்தால் உலகம் உருப்பட்டுவிடும்.”

1426. “உபதேசியாதல் எளிது. ஆனால் செய்வது கடினம்.”

1427. “மனம் ஒரு விந்தையான பொருள். முறையாகப் பழக்கினால் நாய்; இல்லையானால் புலி:”

1428. “நோய் வராது வாழ்தலே ஒரு கலை. ஆசைகள் இல்லாமற்போனால் நோய் இல்லை.”

1429. “நூல்களைப் படிப்பது சமைத்த சோற்றைச் சாப்பிடுவதைப் போன்றது.”

1430. “இன்று ஆசை, அரசியல் எல்லாம் வெறும் உள்ளீடில்லாத உணர்ச்சிகளேயாம்.”

1431. “தலைவரின் கொள்கைக்கு மொட்டை போடுகிறவர்கள், தலைவர் இறந்தாலும் தலை மொட்டை போடுகிறார்கள்.”

1432. “பலர் ஏற்றுக் கொள்ளும் ஒரு செயல் மக்களாட்சி முறை தழுவியதே.”

1433. “வாய்ப்புக்களைப் பயன்படுத்தி வளர்பவர்கள் சிலரே.”