பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/162

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

தவத்திரு அடிகளார்


நமது பெண்கள் வாழ்க்கையை மாற்றலாம்; வளர்க்கலாம்.”

1487. “பயம்-கோழைத்தனத்துக்குத் தாய்! நரகத்தின் வாயில்!”

1488. “தவறுகளுக்கு அஞ்சுவது வேறு. தண்டனைகளுக்கு அஞ்சுவது வேறு. இன்று தண்டனைகளுக்கே அஞ்சுகின்றனர். தவறுகளுக்கு யாரும் அஞ்சுவதில்லை.”

1489. “ஒருவர்தம் உடற்கருவிகளை பூரணமாகப் பயன்படுத்தினால் இன்பமாக வாழலாம். இது சத்தியம்!”

1490. “வாங்குபவர் விலை பேசாதுபோனால், விற்பவர் விருப்பமே விலையாகிவிடும்.”

1491. “ஒரு நோக்குடைய அரசாங்கத்தில் பணி செய்வோரிடையில் ஒருங்கிணைப்பின்மையே. நோக்கமில்லாத வாழ்க்கையைக் காட்டுகிறது.”

1492. “தியாகம், நாகரிகம் முதலியன பற்றிக் கவலைப்படாது-ஆதாயம் பற்றியே கவலைப்படுதல் விபச்சாரத்துக்கு நேரானது.”

1493. “சமமற்ற நிலைகள் உள்ளவரையில் நற்பண்புகள் வளர்தல் அரிது.”

1494. “வாய்ப்புக்கள் தானாக வருவன அல்ல; உருவாக்கிக் கொள்ளப்படுபவை.”

1495. “தன் தவற்றை உணரும் திறனற்றவர்கள் மற்றவர்கள் தவறுகளைப் பெரிதுபடுத்துபவர்.”

1496. “அதிகாரத்தைச் சுவைத்தல் தீமையில் தீமை.”