பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/163

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

153



1497. “பெரும்பான்மையோர்” முடிவெல்லாம் ஜனநாயகத் தன்மை உடையனவாகாது!”

1498. “விவகாரத்தில்   உளப்பூர்வமான சமாதானம் கண்டால் ஒழிய-விவகாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க முடியாது.”

1499. “கெட்டிக்காரன் கிடைத்ததைச் சுருட்டுகிறான்; ஏமாளி வாய்ப் பறை அறைந்து கொண்டிருக்கிறான்.”

1500. “இந்திய சமுதாயத்தில் புதியன சிந்தித்தவர்கள் உண்டு. ஆனால் இந்திய சமுதாயம் புதியன வற்றை ஏற்கவில்லை.”

1501. “ஒருவர் செய்யும் தவறை அவருடைய சமுதாயத்தின் மேல் ஏற்றிக் கூறுதல் ஆகாது. நல்லதல்ல.”

1502. “இந்தியர் வாழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டாலே-இந்தியா வளரும்.”

1503. “தகுதியில்லாதன்வற்றிற்கு ஆசைப்பட்டு அல்லல்படுதல் அறியாமை.”

1504. “மற்றவர் துன்பம் அறியாதார் மோசமான மனிதர்கள்.”

1505. “இந்திரா படுகொலையில் திட்டமிட்டவன் வெற்றி பெற்றதற்குக் காரணம் திட்டமிட்டவனின் புத்திசாலித்தனமல்ல. மற்றவர்களின் கடமையில் காட்டிய அலட்சியமே காரணமாகும்.”

1506. “நமது அரசாங்கத்திற்கு சுறுசுறுப்பு இல்லாமல் இருப்பதும் ஒருகுறை.”

1507. “காரண காரியங்களை ஆராயாமல் பேசுவது பைத்தியக்காரத்தன்ம்.”