பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/166

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

தவத்திரு அடிகளார்



1528. “ஒருமைப்பாட்டில் வடபுலத்தார் வளர்ந்திருப்பதைப் போல் தமிழர்கள் வளரவில்லை.”

1529. “இந்தியாவில் மதத்தின் பெயரால் நிகழும் நிகழ்ச்சிகள்-மத நம்பிக்கையைப் பொய்த்துப் போகச் செய்கின்றன.”

1530. “உரிமைகள் பெறுவதற்கு பிரிவினை வேண்டும் என்பது பொருளற்றது.”

1531. “வாழ ஆசைப்படுகின்றனர்; ஆனால் முயற்சிதான் இல்லை.”

1532. “நன்றாக வாழ்தலுக்குத் தாய் அறிவறிந்த ஆள்வினைவே.”

1533. “ஒருவர் மீது பற்று என்பது அவர்களைப் பொறுத்தது இல்லை. அவர்களுடைய கொள்கைகளைப் பொறுத்ததாக அமைதல் பயன்தரும்.”

1534. “இன்றைய அரசியலில் கொல் குறுப்புக் காரர்களே மேவி வருகின்றனர்.”

1535. “செயலின்மை நோக்கி வெட்கப்பட்டு வருந்தாதார்-ஒருபொழுதும் செயல் திறனுக்கு உரியவர் ஆகார்.”

1536. “நேற்றைய தவறுகளே அழிந்துவிடாது. இன்று அந்தத் தவறுகளை நியாயப்படுத்தும் முயற்சியிலேயே அழிவு தொடங்குகிறது.”

1537. “திறம்படச் செய்யாதார்-எதற்கு? வையகத்திற்குப் பொறையாக!”

1538. “பரிந்துரைச் செய்யும் உரிமை-காற்று போலப் பயன்படுவதற்கல்ல; மருந்தெனப் பயன் படுதலுக்கேயாம்,”