164
தவத்திரு அடிகளார்
1615. “நன்மையிலும் வளர்ச்சியுண்டு.”
1616. “வளர்ச்சியில்லாத பண்புகள் கூடக் காலப் போக்கில் தரம் குறையும்.”
1617. “பணிகளை, எதிர்பார்த்துத் தொடங்கினால் சிறப்பாக நடக்கும்.”
1618. “ஒற்றுமை, தேவையின் அடிப்படையில் தோன்றியது.”
1619. “ஒருமைப்பாடு என்பது வேற்றுமைகளைக் கடந்த ஒரு பொதுவான உறவு.”
1620. “ஒன்றுதல், கலத்தல், - இது கூடாத ஒன்று.”
1621. “தனித்தன்மை” வறட்சித்தன்ைம உடையது.”
1622. “வாழ்க்கையின் அடிப்படை நோக்கத்தில் தான் ஒருமைப்பாடு கால் கொள்ள இயலும்.”
1623. “பொதுமக்கள் பல்வேறு குடிமைப்பண்புகளில் வளர்தல் அவசியம்.”
1624. “கடவுள் நம்பிக்கையே போதுமானது. மதங்கள் வேண்டியதில்லை.”
1625. “என்னுடைய பகைவனும் பலமாக இருந்து நான் மோதினால்தான் என் பலம் வளரும்.”
1626. “குறைந்த அளவு வாக்காளர்களை நான் சந்தித்து வாக்குப் பெற பிரசாரம் ஏன்? எல்லாம் வெளிச்சம்தான்!”
1627. “பதவிகளுக்கு ஏற்படும் நெருக்கடி, பணிகளுக்கு ஏற்பட்டால் நல்லது.”
1628. “சரியாகச் செய்யாதார், செய்யாமைக்குத் தாம் நோகும் இயல்பு வராத வரையில் திருத்தம் வராது.”